லாரி மோதி பெண் உடல் நசுங்கி பலி

தஞ்சை அருகே லாரி மோதி கணவர் கண்முன்னே பெண் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்;

Update:2023-10-21 02:48 IST

மகளை பார்க்க சென்றனர்

தஞ்சையை அடுத்த குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது60) விவசாயி. இவருடைய மனைவி பத்மினி (50). இவர்கள் இருவரும் கொடிக்காலூரில் உள்ள மகளை பார்க்க நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றனர். டவுன் கரம்பை அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பெண் உடல் நசுங்கி பலி

இதில் லாரி சக்கரத்தில் சிக்கி பத்மினி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பத்மினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயமடைந்த கணேசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

போலீசார் விசாரணை

இதுதொட்ர்பான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி கணவர் கண் முன்னே பெண் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்