அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது.

Update: 2024-05-05 11:10 GMT

சென்னை,

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதி இருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதேபோல, சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வருகிற 20-ந்தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்