சேலம் புதிய பஸ்நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு

சேலம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் பலியானார்.

Update: 2022-11-06 19:30 GMT

சேலம் புதிய பஸ் நிலையத்தில் சுமார் 80 வயது மதித்தக்க முதியவர், பயணிகளிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த 4-ந் தேதி அங்குள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், அந்த முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் இரவு 10.30 மணியளவில் திடீரென இறந்துவிட்டார். இறந்த முதியவரின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்