ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு

ஆற்றில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-21 19:32 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழப்பத்தையை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று மேல வடகரை பாலத்தின் அருகில் பச்சை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்