ரெயில்வே சுரங்கப்பாதையில் முதியவர் பிணம்

எரியோடு அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் முதியவர் பிணமாக கிடந்தார்.;

Update:2023-04-05 21:57 IST

எரியோடு அருகே கோவிலூரில், கதிரனம்பட்டி செல்லும் சாலையில் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை பகுதியில் நேற்று மாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்துகிடந்தார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள், எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்