மோட்டார்சைக்கிள் மீதுவேன் மோதி முதியவர் படுகாயம்:டிரைவர் கைது

போடி அருகே மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-22 18:45 GMT

போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). நேற்று காலை இவர், போடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். போடி-தேனி சாலையில் மீனா விலக்கு அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆறுமுகத்தின் மகன் மதியழகன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவரான மதுரையை சேர்ந்த காசிநாதன் (30) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்