செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்