பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-04-28 06:48 GMT

சென்னை,

சென்னை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வருகிற 30-ம் தேதி காலை 9 மணி முதல் மே 1-ம் தேதி வரை மண்டலம் 13, 14, 15-க்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்து இருப்பதாவது:- நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 30. 04. 2024 அன்று காலை 9 மணி முதல் 01. 05. 2024 அன்று காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) மண்டலம் - 13 (பகுதி), 14 மற்றும் 15-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

மண்டலம் - 13 (அடையாறு பகுதி) திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு இந்திரா நகர் OHT

மண்டலம் - 14 (பெருங்குடி) கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம்

மண்டலம் - 15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம்

Tags:    

மேலும் செய்திகள்