ரூ.9.10 லட்சத்தில் சிமெண்டு சாலை திறப்பு
கோவிந்தப்பேரி பகுதியில் ரூ.9.10 லட்சத்தில் சிமெண்டு சாலை திறப்பு விழா நடந்தது.;
கடையம்:
கோவிந்தப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாங்கபுரம் காளியம்மன் கோவில் தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.9.10 லட்சத்தில் புதியதாக சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் திறந்து வைத்தார். விழாவில் துணைத் தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன், சுகிர்தா, ஊராட்சி செயலர் மூக்காண்டி, மற்றும் மாரி துரை, குமார், தூய்மை பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.