ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம்
சோமரசம்பேட்டை அருகே ராஜகாளியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
சோமரசம்பேட்டை, ஜூன்.14-
சோமரசம்பேட்டை அருகே சாந்தாபுரம் குடித்தெருவில் ராஜகாளியம்மன், மகா கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் பாலாலய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.