தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-23 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதை பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் அரசு வக்கீல்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்