தூத்துக்குடியில் போலீஸ் துறை தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடியில் போலீஸ் துறை தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

Update: 2023-07-12 18:45 GMT

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்து வருகிறது.

அதன்படி நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்த 13 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 42 மனுதாரர்கள் என மொத்தம் 55 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த போலீஸ் சூப்பிரண்டு, புகார் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்