பவுர்ணமியையொட்டி மோகனூர் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2023-06-03 19:00 GMT

மோகனூர்:

மோகனூரில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் நேற்று பவுர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்