வாசுதேவநல்லூர் பகுதியில் 27-ந் தேதி மின்தடை

வாசுதேவநல்லூர் பகுதியில் 27-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-25 18:45 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், உள்ளார், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், வெள்ளயானைக்கோட்டை, தாருகாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்