களக்காடு, பணகுடி பகுதிகளில் 15-ந் தேதி மின்தடை

களக்காடு, பணகுடி பகுதிகளில் 15-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-10 20:01 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பணகுடி மற்றும் களக்காடு துணை மின் நிலையங்களில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமாந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம், கோதைசேரி, வன்னியன்குடியிருப்பு, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் வளனரசு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்