லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி சரிவு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்்தி குறைந்தது.

Update: 2023-10-07 18:45 GMT

கூடலூர் அருகே லோயர்கேம்பில் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு மின் உற்பத்தி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக 2 ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் லோயர்கேம்பில் மின் உற்பத்தியும் அதிகரித்தது.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 121.35 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 680 கன அடியாகவும் இருந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,167 கன அடியில் இருந்து 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் லோயர்கேம்பில் உள்ள நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்து 2 ஜெனரேட்டர் மூலம் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்