காஞ்சீபுரத்தில் இன்று மின்தடை

காஞ்சீபுரத்தில் மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 01:22 GMT

காஞ்சீபுரம் உட்புற துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகவே இன்று மாமல்லன் நகர், மின் நகர், திருக்காலிமேடு, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, காமாட்சி அம்மன் கோவில் சார்ந்த பகுதிகள், வைகுண்ட பெருமாள் கோவில் சார்ந்த பகுதிகள், ரெயில்வே ரோடு மற்றும் காந்தி ரோடு போன்ற பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

அதேபோல் காஞ்சீபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சீபுரம் நகரத்தை சுற்றியுள்ள சில பகுதிகளான ஒலிமுகமதுப்பேட்டை வெள்ளைகேட், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், நெட்டேரி, சி.வி.எம். நகர், ஜே.ஜே.நகர், புதுநகர், ஈஞ்சம்பாக்கம், விஷகண்டிகுப்பம், மோட்டூர், செம்பரம்பாக்கம், செட்டியார்பேட்டை, பொன்னேரிக்கரை, அன்னை தெரசா நகர், ஆரியபெரும்பாக்கம், புதுபாக்கம், பெரியகரும்பூர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவல் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்