நாளை மின்சாரம் நிறுத்தம்

திண்டுக்கல், பழனி நகரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-14 20:45 GMT

திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிபட்டி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இதேபோல் தாடிக்கொம்பு பீடரில் சிறப்பு பராமரிப்பு பணி நடப்பதால் சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர், தாய்முகாம்பிகை நகர், பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக திண்டுக்கல் மேற்கு உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பழனி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதையொட்டி பழனி நகர், பாலசமுத்திரம், ஆயக்குடி, மானூர், பூலாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை, பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்