கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி திடீர் உயிரிழப்பு

செட்டியாம்பாளையத்தில் தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-23 05:03 GMT

கோபிமொடச்சூர்,

கோபி நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). இவர் கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் உள்ள அண்ணமார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். மேலும் இவருக்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் பழனிச்சாமி தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று கோவில் பகுதியில் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பழனிச்சாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணையில், கோவில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டுக்கிடாவை   வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து பூசாரி பழனிச்சாமி(45) உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டதாகவும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆட்டுகிடாயை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்