கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

கோவில்பட்டியில் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-10-04 19:00 GMT

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் ஸ்தாபகர் கே.ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்காக, பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

இதில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடமும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி 2-வது இடமும் பிடித்தது. பரிசுகளை கோவில்பட்டி நேஷனல் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சண்முகவேல் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர், கே.ஆர்.அருணாச்சலம் தலைமையில் கல்லூரி முதல்வர்கள் செய்து இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்