பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்

சீர்காழி அருகே பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்தது

Update: 2022-06-07 17:12 GMT

சீர்காழி

சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில், 108 திவ்ய தேசங்களில் 28-வது தலமான திருவிக்கிரம நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 10 நாட்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாள் கருடசேவை உற்சவம் நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று தங்க கருட வாகனத்தில் தாடாளன் பெருமாள் என்கிற திருவிக்ரம நாராயணப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்