பொதுமக்கள் சாலைமறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 19:30 GMT

இளம்பிள்ளை:-

இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாம்புரம் கிராமம் தைலாம்பட்டி பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி, நேற்று இளம்பிள்ளையில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் தைலாம்பட்டி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசாமி மற்றும் மகுடஞ்சாவடி போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதிக்கு சீராக காவிரி குடிநீர் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்