அயோத்தியாப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்தில் பழுதடைந்த மின்சாதனங்களுடன் பொதுமக்கள் தர்ணா

அயோத்தியாப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்தில் பழுதடைந்த மின்சாதனங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.;

Update:2023-09-03 04:32 IST

அயோத்தியாப்பட்டணம்:

அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனி பகுதியில் நேற்று முன்தினம் மதியம் மின்அழுத்தம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் டி.வி.,, மின்விசிறி, ஏ.சி., மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரியத்தில் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே நேற்று அயோத்தியாப்பட்டணம் மின்வாரிய அலுவலகத்துக்கு தேவாங்கர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அடிக்கடி சீரற்ற மின்வினியோகம் வழங்குவதாக குற்றம்சாட்டியதுடன் மின்வாரிய அலுவலகம் முன்பு டி.வி., பேன், மிக்சி உள்ளிட்ட மின்சாதன பொருட்களுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்