திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-05-27 22:34 IST

எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மதுரை கோட்ட தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே துறையில் காலியாக உள்ள 20 ஆயிரம் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். 8 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓவர் டைம் அலவன்சு வழங்க வேண்டும். ரெயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ரெயில்வே ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்