ராமேஸ்வரத்தில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-26 05:51 GMT

கோப்புப்படம்

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடல் நீர் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நிற்கின்றன. திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக கடல்வள ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு வந்துவிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்