ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

தென்காசி அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-21 19:00 GMT

குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் தென்காசி ஊர்மேலழகியான் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மொபட்டில் 2 மூட்டைகளில் 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்த இருளப்பன் (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்