பள்ளிக்கரணை ஏரியில் உடலில் கல்லை கட்டிய நிலையில் மூதாட்டி பிணம் மீட்பு; கொலையா என்று விசாரணை ?

பள்ளிக்கரணை ஏரியில் உடலில் கல்லை கட்டிய நிலையில் மூதாட்டி பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-08-29 05:52 GMT

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பவானி நகரில் பூர்வாங்கா ஏரி உள்ளது. இந்த ஏரியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் யார்?, எந்த ஊர்? என்பது தெரியவில்லை. மேலும் மூதாட்டியின் புடவையில் சுமார் 4 கிலோ எடை கொண்ட பாறாங்கல் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டு, உடலில் கல்லைக்கட்டி ஏரியில் வீசப்பட்டாரா? அல்லது அவரே உடலில் கல்லைக்கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்