பவானிசாகர் அணையில் நீர் திறப்பு 1,150 கன அடியாக குறைப்பு

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.

Update: 2023-10-31 08:55 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பவானி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1,950 கன அடியில் இருந்து 1,150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 65.13 அடியாக உள்ள நிலையில், அணையில் தற்போது 9 டி.எம்.சி. அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்