தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தவிழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தேனியில் நடந்தது.;

Update:2023-10-09 00:15 IST

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தேனியில் நடந்தது. இந்த ஊர்வலத்தை தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் தொடங்கி வைத்தார். தேனி தீயணைப்பு நிலையம் முன்பு ெதாடங்கிய ஊர்வலம் பெரியகுளம் சாலை, நேரு சிலை, மதுரை சாலை வழியாக சென்று பங்களாமேட்டில் நிறைவடைந்தது. இதில் நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி, நிலைய எழுத்தர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு படையினர், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்