சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Update: 2022-10-10 18:45 GMT


சங்கராபுரம்,

சங்கராபுரம் பஸ் நிலையத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள், அங்கு பஸ் நிலையத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் வாகனங்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்