15 மனுக்களுக்கு தீர்வு

நில அபகரிப்பு தொடர்பான 15 மனுக்களுக்கு தீர்வு

Update: 2022-08-06 19:53 GMT

நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முகாம் நடந்தது. உதவி கலெக்டர் தமிழரசி, தாசில்தார் பகவதி பெருமாள், துணை தாசில்தார்கள் சரவணன், இசைவாணி கிராம நிர்வாக அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவு அலுவலர்கள் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள்பானு தலைமையிலான காவல்துறையினர் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 15 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மனு மீதான விசாரணை முடிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்