ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் கல்குவாரி நீரில் மூழ்கி சாவு

ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் கல்குவாரி நீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2022-10-31 19:06 GMT

அன்னவாசல் அருகே குடுமியான்மலையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர் வெங்கடேசளு (வயது 72). இவர், கைவேலிபட்டி மேலபாறைமலையடியில் கல்குவாரி பெரிய பள்ளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் வெங்கடேசளுவை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். மேலபாறை மலையடி கல்குவாரி பள்ளத்தில் சென்று தேடியபோது கரையில் அவரது துணிகள் செருப்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கடேசளு தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக இதுகுறித்து அன்னவாசல் போலீசார் மற்றும் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த வெங்கடேசளுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்