அரிசி ஆலை, பள்ளியில் திருட்டு

திண்டிவனம் அருகே அரிசி ஆலை, பள்ளியில் திருட்டு நடந்தது.

Update: 2023-01-27 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே வெண்மணியாத்தூரில் உள்ள அரிசி ஆலை கட்டிட டவரில் இருந்த 22 பேட்டரிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதேபோல் வெண்மணியாத்தூர் சாலையில் உள்ள யுனைடெட் கிங்டம் என்ற தொடக்கப்பள்ளியில் கம்ப்யூட்டர், மின்சார அடுப்பு, கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்