மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

Update: 2023-01-16 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை ஆண்டிநாடாரூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சமுத்திர நாடார் மகன் மணிமாறன் (வயது 19). இவர் பதநீர், நுங்கு வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு சுரண்டைக்கு திரைப்படம் பார்ப்பதற்காக சென்று ெகாண்டு இருந்தார்.

சுரண்டை அம்மையாபுரம் அருகில் வரும் போது, சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிமாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்