சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து அபாயம்

சேதமடைந்த மின்கம்பங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2023-05-07 19:00 GMT

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 12-வது வார்டு பகுதியான திருத்தங்கல் பாண்டியன்நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட மின்கம்பங்கள் பல சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை உடனே சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மின் வாரியத்துக்கு பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மாநகராட்சி கவுன்சிலர் குருசாமி கூறியதாவது:- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 5 தெருக்களில் மின் கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை உடனே சரி செய்யவில்லை என்றால் நிச்சயம் விபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து மின்கம்பங்களை மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்