அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

ஒரத்தநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தாா்.

Update: 2022-09-23 20:29 GMT

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டை அடுத்துள்ள வெட்டிக்காடு கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையன் (வயது65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டு அருகிலுள்ள டீக்கடைக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் முத்தையன் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முத்தையனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முத்தையனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிய வாகனத்தை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்