குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வலியுறுத்திசெவ்வாய்பேட்டை பகுதி பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க வலியுறுத்தி சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-13 20:36 GMT

சேலம்

சேலம் மாநகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட செவ்வாய்பேட்டை தேவாங்கபுரம் பகுதி மக்கள் நேற்று மாலை, செவ்வாய்பேட்டை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாக குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தி உள்ளோம் என்று கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த அலுவலர்கள் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர். இதையடுத்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சம்பவ இடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்