'நீட்' தேர்வு போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்ச்சி

‘நீட்’ எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிநடந்தது.

Update: 2023-09-01 21:45 GMT

தி.மு.க. மாணவரணி, மாணவர் கூட்டமைப்பு சார்பில் 'நீட்' எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரம் அரசு கலைக்கல்லூரி முன்பு நடந்தது. 'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் நினைவு நாளையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் பொன்ராஜ் தலைமை தாங்கினார்.

அதையடுத்து மாணவி அனிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ் முத்துகிருஷ்ணன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாண்டியராஜன், ரவிசங்கர், மாணவரணி துணை அமைப்பாளர்கள் சுரேஷ், செல்வகுமார், சரண்யா மற்றும் ஒன்றிய, நகர மாணவரணி, இளைஞரணி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு 'நீட்' தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்