மணல் கடத்தல்; 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல்
மணல் கடத்தல் தொடர்பாக 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
விழுப்புரம்,
காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் லட்சுமிபுரம் தென்பண்ணையாற்று அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும், அதில் வந்தவர்கள் சரக்கு வாகனத்தை நடுரோட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இதையடுத்து அந்த சரக்கு வாகனங்களை பார்த்தபோது, அதில் மணல் கடத்தப்பட்டு வந்தது போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மணல் கடத்தல் தொடர்பாக வேலாயுதம், முருகதாஸ் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.