தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ஆம்பூரில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
ஆம்பூர் நகராட்சியில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். முறையான ஊதியம் வழங்க வேண்டும்.
துப்புரவு காலியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.