காதல் வலையில் விழுந்த பள்ளி மாணவன்: பத்தாம் வகுப்பு மாணவியை கடத்தியதால் பரபரப்பு
சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை 12-ம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக கூறப்பட்ட புகாரில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை 12-ம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக கூறப்பட்ட புகாரில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஓமலூர் அருகே தனியார் பள்ளியில் படித்து வரும் 10-ம் வகுப்பு மாணவியை 12-ம் வகுப்பு மாணவன் கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில், விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, மாணவி வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் மாணவியை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவன் கடத்தி சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவனின் செல்போன் சிக்னலை வைத்து இருவரையும் போலீசார் தேடி .வருகின்றனர்.