பள்ளி கட்டிட திறப்பு விழா

கீழச்சிவல்பட்டியில் பள்ளி கட்டிட திறப்பு விழா நடந்தது.

Update: 2022-05-22 21:18 GMT

திருப்பத்தூர்,

கீழச்சிவல்பட்டியில் அரசு உதவி பெறும் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்விக்கான கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைவர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கூடுதல் கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

விழாவில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், கீழச்சிவல்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் நாகமணி, அழகாபுரி ஊராட்சி மன்றத்தலைவர் மணிவாசகம் செட்டியார், ஆர்.எம்.பி.மெட்ரிக்பள்ளித் தாளாளர் பழனியப்பன், பள்ளித்தலைமை ஆசிரியை வள்ளியம்மை, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளிச் செயலர் அழகுமணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் பள்ளி பொருளாளர் கருப்பையா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்