ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

குரங்கனி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-07-11 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே தாமிபரணி ஆற்றில் உறவினர்களுடன் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் திடீரென்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

பள்ளி மாணவன்

ஏரல் அருகே உள்ள குரங்கணியில் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. இவ்விழாவிற்கு உவரி டாட்டா குடியிருப்பு நடுத்தெருவை சேர்ந்த செந்தில், இவரது மனைவி பாப்பா மற்றும் இவரது தங்கை விஜயா மகன் ஆதிகேசவன் (வயது 12) ஆகியோர் உறவினர்களுடன் வந்திருந்தனர். ஆதிகேசன் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் நேற்று காலையில் குரங்கணி தாமிரபரணி ஆற்றில் குளித்தனர்.

ஆற்றில் மூழ்கினான்

உறவினர்களுடன் ஆதிகேசவனும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளான். அப்போது அவனுக்கு நீச்சல் தெரியாததால் மூழ்கி உள்ளான். உடனடியாக உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அவரை மீட்டு தென்திருப்பேரை அரசு மருத்துவமனைக்கு ெகாண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியிலே அவர் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்