டிரைவருக்கு அரிவாள் வெட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-03-11 18:45 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சார்ந்தவர் சுபாஷ். (வயது 22). லாரி டிரைவர். இவருக்கும், அடையகருங்குளம் சக்தி நகரைச் சேர்ந்த மதியழகன் மகன் மகேந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மகேந்திரன், சுபாஷை அரிவாளால் வெட்டினார். இவருக்கு உதவியாக அவருடைய நண்பர்கள் சிவசக்தி நகரைச் சார்ந்த அருண்குமார், சந்தோஷ் குமார், அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த ஷியாம், ராசு, மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த கணேசன், குணசேகரன் ஆகியோர் செயல்பட்டனர்.

இதுபற்றி சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், கணேசன், குணசேகரன், சந்தோஷ்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தார். மகேந்திரன், ஷியாம், ராசு ஆகியோரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்