விவசாயிக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-07-14 18:45 GMT

களக்காடு:

களக்காடு அருகே மஞ்சுவிளை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவருடைய மகன் பக்தர் (வயது 33). விவசாயி. அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துகுட்டி (48). இவர், பக்தரின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அங்குள்ள மளிகை கடை அருகில் பக்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துகுட்டி, அவருடைய மகன் ரமேஷ் (20) ஆகிய 2 பேரும் சேர்ந்து, பக்தரை அவதூறாக பேசி, அவரை அரிவாளால் வெட்டினர். மேலும் அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த பக்தரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துகுட்டி, ரமேஷ் ஆகியோரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்