தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு:மருமகன், மகன் கைது

தூத்துக்குடிதருவைகுளம் அருகே பேரனை தாக்கிய தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டார். இது தொடர்பாக அவரது மருமகன் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-02 18:45 GMT

தருவைகுளம் அருகே உள்ள வேப்பலோடை போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் திருமலைசாமி (வயது 48). தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த தனது 3 வயது பேரனை அடித்து உதைத்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தையும் திருமலைசாமியின் மருமகனுமான கருப்பசாமி (26)யும், திருமலைச்சாமி மகன் பிரபாகரனும்(23) அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் மதுபோதையில் சிறுவனை தாக்கியதால் ஆத்திரமடைந்த கருப்பசாமியும், பிரபாகரனும் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த திருமலைச்சாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் தருவைக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து கருப்பசாமி, பிரபாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்