ரூ.57 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை

பரமத்திவேலூரில் ரூ.57 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடந்தது.

Update: 2023-01-10 19:45 GMT

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.57 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்திற்கு 743 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.27.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ.17.50-க்கும், சராசரியாக ரூ.24.-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 ஆயிரத்து 289-க்கு விற்பனையானது. நேற்று நடந்த ஏலத்திற்கு 2 ஆயிரத்து 449 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.91-க்கும், குறைந்தபட்சமாக ரூ.16.17- க்கும், சராசரியாக ரூ.25.12-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.57 ஆயிரத்து 392-க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்