பூமிக்குள் தொட்டி அமைத்து தேங்காய் ஓடு கரி தயாரிக்க தடை: கலெக்டர் விசாகன் உத்தரவு

திண்டுக்கல்லில் பூமி்க்குள் தொட்டி அமைத்து தேங்காய் ஓடு கரி தயாரிக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-09-24 17:42 GMT

பூமிக்குள் தொட்டி அமைத்து தேங்காய் ஓடு கரி தயாரிக்கும் தொழிற்கூடங்களால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. எனவே அதுபோன்ற தொழிற்கூடங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கும்படி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் மற்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பூமிக்குள் தொட்டி அமைத்து தேங்காய் ஓடு கரி தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்