காளப்பநாயக்கன்பட்டியில்நாளை மின்சாரம் நிறுத்தம்

Update:2023-05-04 00:30 IST

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம் புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்