தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

Update: 2023-01-24 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 703 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.760-க்கு விற்பனையானது. நேற்று 1,085 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.772-க்கும், குறைந்தபட்சமாக ரூ.620-க்கும், சராசரியாக ரூ.721.83-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 83 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது. 

மேலும் செய்திகள்